Aathi Pitha Kumaran Lyrics – ஆதி பிதா குமாரன்

Lyrics in Tamil

பல்லவி
ஆதி பிதா குமாரன் – ஆவி திரியேகர்க்கு
அனவரதமும் தோத்ரம்!- திரியேகர்க்கு அனவரதமும் தோத்ரம்.

அனுபல்லவி

நீத்த முதற் பொருளாய் நின்றருள் சர்வேசன் ,
நிதமும் பணிந்தவர்கள் இருதயமலர் வாசன் ,
நிறைந்த சத்திய ஞான மனோகர
உறைந்த நித்திய வேதா குணாகர,
நீடு வாரி திரை சூழ மேதினியை
மூடு பாவ இருள் ஓடவே அருள் செய் .-ஆதி

சரணங்கள்
எங்கணும் நிறைந்த நாதர் – பரிசுத்தர்கள்
என்றென்றைக்கும் பணிபாதர் ,
துங்கமா மறைப்பிர போதர்-கடைசி நடு
சோதனைசெய் அதி நீதர்,
பன் ஞானம்,சம்பூரணம் ,பரிசுத்தம் ,நீதி என்னும்
பங்கில்லான் , தாபம் இல்லான் ,பகர்அடி முடிவில்லான்
பண்பதாய்சு யம்பு விவேகன்,
அன்பிரக்கத யாளப்பிரவாகன்
பார்தலத்தில் சிருஷ்டிப்பு , மீட்பு ,பரி
பாலனைத்தையும் பண்பாய் நடத்தி , அருள் .- ஆதி

நீதியின் செங்கோல் கைக்கொண்டு -நடத்தினால் நாம்
நீணலத்தில்லாமல் அழிந்து ,
தீதறு நரகில் தள்ளுண்டு -மடிவோ மென்று
தேவ திருவுளம் உணர்ந்து,
பாதகர்க் குயிர் தந்த பாலன் ஏசுவைக் கொண்டு
பரண் எங்கள்மிசை தயை வைத்தனர் ;இது நன்று
பகர்ந்த தன்னடி யார்க்குறு சஞ்சலம் ,
இடைஞ்சல் வந்த போதே தயவாகையில்
பாரில் நேரிடும் அஞ்ஞான சேதமுதற்
சூரியன் முன் இருள் போலவே சிதறும் .- ஆதி

Lyrics in English

Aathi Pitha Kumaran – aavi thiriyaekarkku
anavarathamum thothram!- thiriyaekarkku anavarathamum thothram.

anupallavi

Neetha muthal porulaai nintarul sarvasan
Nithamum panintavargal Iruthayamalar vaasam
Niraintha sathiya gnana manohara
Uraintha nithiya vdea kunagara
Needu vaari thirai soola mathiniai
Moodu paava irul oodave arul sai -aathi

Video Song

Spread the love
Related Post
Disqus Comments Loading...